மழைகளையும் கரைக்கும்
மழை மிரட்டுகிறது
அப்பாவி முகங்கொண்ட படகுகள்
அலைபாயும் நீரோட்டதில்
சுழ்ன்று சுழன்று
ஒதுங்குகின்றன
உக்கிரமான தழுவலில்
முகிலும் வயலும்
கருமையும் பச்சையும்
சொட்டு சொட்டாய்க்
கரையும் அவலம்
ஏரிக்குள் எறிந்த
சடலங்கள் எதையோ
தேடித் துழாவுவது போல்
தனியாய். கும்பலாய்
அப்பாலும் இப்பாலும்
தாறுமாறாய் மிதக்கும்
சொந்த பந்தங்கள்…
நள்ளிரவுத் துயரங்களை
சிதறடிக்கும் பணியில்
கொட்டித் தீராத மழை

